கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு பெண்கள் அதிரடிக் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 4 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க நகைகள்
சந்தேகநபர்கள் டுபாயிலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களின் உடல்கள், பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |