கருப்பு யூலை நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு
கருப்பு யூலையின் 38வது நினைவு தினம் இன்று 12 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் இருக்கும் பாதுகாப்பு நடைமுறை காரணமாக உயிரிழந்தவர்களுக்குச் சுடர் ஏற்றி அஞ்சலி மட்டும் செய்யப்பட்டுள்ளது.
கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத்தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை.
தமிழர்கள் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த கோரமான ஒரு நிகழ்வாகும்.