கருப்பு ஜூலை - செம்மணி பேரவலங்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்
கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கும் நீதிகோரி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் அருட்தந்தையர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருப்பு ஜூலை இலங்கை அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் வடகிழக்கில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

















தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 21 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
