இலங்கையின் சுதந்திர தினம்! யாழ்.பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி (video)
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.பல்கலையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்
இதேவேளை, இலங்கையின் சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள் என குறிப்பிட்டு இன்றைய தினம்
வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களிலும் பூரண கதவடைப்பு இடம்பெற்று வருகின்ற
நிலையில் யாழ்ப்பாணம் - வடமராட்சியில், பருத்தித்துறை மற்றும் நெல்லியடி
பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் கதவடைக்கப்பட்டு காணப்படுகின்றன.