சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குறித்து வெளியான தகவல்
சிலி நாட்டில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
53 வயதுடைய நபரொருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளான நபரின் உடல் நிலை சீராக காணப்படுவதாக தெரிவித்துள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனிதர்களிடையே பரவக்கூடும் என எச்சரிக்கை
H5N1 வகையை சேர்ந்த பறவைக் காய்ச்சல் சிலியில் காட்டு விலங்குகளிடையே கடந்த ஆண்டில் பதிவாகியியுள்ள நிலையில் பறவைகள் மற்றும் கடல் பாலூட்டிகளிடமிருந்து இந்த தொற்று மனிதர்களிடையே பரவக்கூடும் என சிலியின் சுகாதார அதிகாரிகள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த பறவைக்காய்ச்சல் என்பது தொற்று நோயா, இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.