அமெரிக்காவின் நகர்வு மிகப் பெரியதாக இருக்கும்! ட்ரம்ப் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நகர்வு மிகப் பெரியதாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்பான முடிவுகள் அடுத்த வாரத்திற்குள் தீர்க்கமானதாக இருக்கும் என்றும், அது தொடர்பான முடிவுகள் வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப்,
"நான் திட்டமிடப்பட்டுள்ளவற்றை செய்யலாம், செய்யாமல் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது.
அணுசக்தி தளம்
ஈரானுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஈரானின் நிலத்தடி ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
இதுவரை அந்த தளத்திற்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அணுசக்தி திட்டம்
இது ஈரான், அணுசக்தி திட்டத்தை கைவிட ஒப்புக்கொள்கிறதா என்பதைப் பார்க்க ட்ரம“ப“பால“ வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாகவும், வெள்ளை மாளிகைக்கு வருகை தர முன்வந்ததாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த மரணம் மற்றும் அழிவுக்கு முன்பு நீங்கள் ஏன் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? நீங்கள் ஏன் செல்லவில்லை?" என்று இரு தரப்பிடமும் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam
