ஜனாதிபதி செய்த பெரிய தவறு! சபையில் பகிரங்கமாக அறிவிப்பு
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவறு செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செய்த தவறு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஜப்பானின் அபிவிருத்தி திட்டத்தில் லஞ்சம் கேட்டார் என்ற குற்றச்சாட்டு காரணமாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரினார்.
எனினும் ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பின்னர் ஆணைக்குழுவை அமைத்து மீண்டும் அவரை அமைச்சராக்கியுள்ளார். இது தவறான விடயம். இது தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஜப்பானிய தூதுவரே இந்த விடயத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இது எவ்வாறு இடம்பெற முடியும். மோசடிக்காரர்களை அமைச்சரவைக்கு கொண்டு வர வேண்டாம்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது.
இலங்கையில் அரசியலமைப்பை திருத்த வேண்டும். இல்லையேல் 19வது திருத்தத்தையாவது கொண்டு வர வேண்டும். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்.
தலைமை பொறுப்புக்களை கோரும் எதிர்கட்சி
அமைச்சரவையில் அரசாங்க கட்சியினர் இருக்கின்ற போது, நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப் பொறுப்புக்களை எதிர்கட்சி கோருகிறது. அதுவும் அமைச்சரவை அந்தஸ்தை கொண்ட குழுக்களே இவ்வாறு செயற்படுகின்றது.
எனவே அவற்றில் எவ்வித வேதனங்களும் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ தமது கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
ராஜபக்சர்களின் சவால்
இதேவேளை நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த மகிந்த ராஜபக்ச, தாம் ஒரு டொலரையாவது கொள்ளையடித்திருந்தால் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து விடுவேன் என்று சவால் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் ராஜபக்சர்கள் 40 கோடி ரூபா செலவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்ததாக சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்த விடயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இதனை தேடிப்பிடித்து அவர்கள் கொள்ளையடித்தார்கள் என்பதை நிரூபித்தால், ராஜபக்சர்களை நிரந்தரமாக வீடுகளுக்கு அனுப்பி விடலாம்.
எனினும் வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக்கி இலங்கைக்கு அனுப்புவதால் இதனை தேட முடியாது. இதேவேளை சஜித் பிரேமதாச சிறந்தவர் அவர் கொள்ளையடிக்கமாட்டார்.”என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
