இலங்கை தொடருந்து சேவைகளில் பாரிய மோசடி! வெளிக்கொணர காத்திருக்கும் அநுர தரப்பு
இலங்கையில் நீண்ட தூரம் பயணிக்கும் தொடருந்துகளின் முன்பதிவு பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து பாரிய மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு குழுவினர் நீண்ட தூரம் பயணிக்கும் தொடருந்துகளில் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து அவற்றை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்கியவர்களின் தொலைபேசி இலக்கங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பயணசீட்டு மீளாய்வு
இதன் மூலம், இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குணசேன கூறியுள்ளார்.

மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பயணசீட்டுக்களை மீளாய்வு செய்வதை கடுமையாக்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam