அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக இலங்கை பெண் நியமனம்!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மெலனோமாவில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அஷானி வீரரத்ன அந்நாட்டின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக ஜனாதிபதி ஜோ பைடனால் நிமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 15ம் திகதி இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழு தேசிய புற்றுநோய் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார நிறுவனத்தில் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கும்.
இலங்கையில் பிறந்து ஆப்பிரிக்காவின் லெசோதோவில் வளர்ந்த வைத்தியர் வீரரத்ன முதன்முதலில் 1988ம் ஆண்டு மேரிலாந்தின் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் உயிரியல் படிக்க அமெரிக்கா வந்தார்.
ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருந்தியல் துறையில் மூலக்கூறு மற்றும் செல்லுலார் புற்றுநோயியல் கலாநிதி பட்டம் பெற்றார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri