வவுனியா நகரில் துவிச்சக்கரவண்டி மாயம்: பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்(Photos)
வவுனியா நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.
வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி நேற்று காலை 10.44 மணியளவில் இனந்தெரியாத நபரினால் திருடிச் சொல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் துவிச்சக்கரவண்டி உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் சீசிரீவி காணொளி உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் துவிச்சக்கரவண்டியினை திருடிச் சென்றவரின் உருவம் சீசிரீவி காணொளியில் பதிவாகியுள்ளதுடன், அவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 23 மணி நேரம் முன்

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு News Lankasri
