விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம்
மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துளதாக விவசாயம் மற்றும் கால்நடை காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் கடந்தகால அரசாங்கத்தினால் இறக்குமதிசெய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட பயனற்ற மருந்துவகைகள் இருக்கின்றமை எங்களுக்கு தெரியும்.
இரசாயன கூட்டுத்தாபனம்
அதற்காக நாங்கள் இரசாயன கூட்டுத்தாபனம்,விவசாயதிணைக்களம் உள்ளிட்ட திணைக்களத்துடன் கலந்தாலோசித்துள்ளோம்.
எதிர்காலத்தில் பொருத்தமான கிருமிநாசினிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க தீர்மானித்துள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் காணிகள் இராணுவத்தினர் வனவளத்திணைக்களம்,வனஜீவராசிகள் தணைக்களத்திடம் உள்ளது இதுதொடர்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி
மக்களின் இடத்தினை மக்களுக்கு கொடுக்கவேண்டும் அதனை கட்டாயம் செய்வோம். அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலப்பகுதியில் மக்களிடம் இருந்த காணி பத்திரங்கள் உறுமய என்ற செயற்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உறுதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் திணைக்களங்கள் ரீதியாக காணப்படுகின்றன. அந்தந்த திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
