காசாவில் 1000 அமெரிக்க வீரர்கள் அமைக்க இருக்கின்ற அதிசய துறைமுகம்! பின்னணியில் உள்ள சதிக்கோட்பாடு!!
பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உனவுப் பொருட்களை கடல் வழியாக வழங்குவதற்காகவென்று கூறி, காசாவில் ஒரு மிதக்கும் துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியுள்ளது.
மத்தியதரைக்கடலில் காசா கடற்கரையில் அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணியில் 1000 இற்கும் அதிகமான அமெரிக்க படைவீரர்கள் ஈடுபட உள்ளார்கள்.
பிரித்தானிய இராணுவமும் அந்தத் துறைமுகப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது காசாவின் கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்குலக இராணுவத்தினர் நிலைகொள்ளப்போகின்றார்கள் இன்னும் சில தினங்களில்.
இது ஒரு மனிதாபிமான நகர்வாக வெளியே காண்பிக்கப்பட்டாலும், இந்த துறைமுக விவகாரத்தில் பின்னால் ஏதாவது பாரிய இராணுவ நகர்வு இருக்கின்றதா என்கின்ற கோணத்தில் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri