ஐரோப்பாவில் இருந்த இலங்கை வந்த பிரஜை அதிரடியாக கைது
பணமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெல்ஜியம் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெல்ஜியம் நாட்டவர் பல கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவரிடமிருந்து 6 கோடியே 38 லட்சத்து 18ஆயிரத்து 452 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.
பண மோசடி
எனினும் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளாமல் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
![தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதி நிமிடங்கள்](https://cdn.ibcstack.com/article/26fc1c12-5721-47b2-8412-b5d9c349631a/24-6682e4888f8fc-md.webp)