வவுனியாவில் ஆசிரியர்களுக்கான இரண்டாம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டாம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (10.09) வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி சார் உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
சுகாதாரப்பிரிவினரின் ஏற்பாட்டில் ஒரு நாளில் 500 பேருக்கு இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை இதன்போது அவதானிக்க முடிந்தது.
அத்துடன், அதிகளவிலான ஆசிரியர்கள் முதல் நாளிலேயே தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வருகை தந்தமையால் நீண்ட வரிசையில் காத்து இருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.







இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
