வவுனியாவில் ஆசிரியர்களுக்கான இரண்டாம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டாம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (10.09) வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி சார் உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
சுகாதாரப்பிரிவினரின் ஏற்பாட்டில் ஒரு நாளில் 500 பேருக்கு இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை இதன்போது அவதானிக்க முடிந்தது.
அத்துடன், அதிகளவிலான ஆசிரியர்கள் முதல் நாளிலேயே தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வருகை தந்தமையால் நீண்ட வரிசையில் காத்து இருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.





கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri