மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கோவ்ட் தடுப்பூசியான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இன்று (18) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 350 மாணவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வெட்டுக்காடு பொது சுகாதார பரிசோதகர் த.மிதுனன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 15 வயதுவரையிலான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் மாணவர்கள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஆர்வமாக ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.






விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam