மட்டக்களப்பில் தாக்குதலுக்குள்ளான சிவில் சமூக செயற்பாட்டாளர்
இராணுவ புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரால் சிவில் சமூக செயல்பாட்டாளர் செல்வகுமார் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் வழிமறிக்கப்பட்டு இனந் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல்
இன்று 14.05.2025 காலை குடும்பிமலைப் பிரதே சத்தில் வைத்து வழி மறித்த நால்வர் அருகில் இருந்த பற்றைக் காட்டிற்குள் இழுத்துச் சென்று கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மிக மோசமான முறையில் சரமாரியாக கையாளும் தடியாலும் தாக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் குடும் பிமலைப் பிரதேசத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் ஏற்பாட்டாளர்களில் ஒருவருடைய தாயார் காலமானதன் காரணத்தினால் இன்றைய தினம் மேற்படி நிகழ்வினை நடாத்த முடியாமல் போயுள்ளது.
இந்த விடயத்தை குடும்பிமலைக் கிராமத்திற்குச் சென்று உரியதரப்பினரிடம் தெரிவித்து விட்டு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
செல்லும் வழியில் தரவை இராணுவமுகாமிற்கும் ஐந்தாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்குமிடையில் வழி மறிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காணப்பட்ட நால்வர் அரைகுறைத் தமிழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சட்டைகள் கிழிக் கப்பட்டு கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தாரிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் அந்த வழியால் வந்த சிலரால் காப்பாற்றப்பட்டு தற்சமயம் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
