மட்டக்களப்பில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயற்படும் பொலிஸார் : மக்கள் விசனம் (Video)

Sri Lanka Police Batticaloa Sri Lanka Magistrate Court Eastern Province
By Bavan Dec 05, 2023 12:34 PM GMT
Report

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் குடியேறி வெளியேற்றப்பட்ட 380 குடும்பங்களையும் மீண்டும் அங்கு குடியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் பொலிஸார் அதை மதிக்காது செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

அந்த பகுதியில் சட்டவிரோதமாக காணியை கையடக்கியவர் பொலிஸாருடன் இணைந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் நீதிமன்ற தீர்ப்பை மீறி பொலிஸார் அராஜகம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த காணி பகுதியில் நேற்று (04.12.2023) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு ஒரு நாளுக்குள் தீர்வு : செந்தில் தொண்டமான்

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு ஒரு நாளுக்குள் தீர்வு : செந்தில் தொண்டமான்

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடி தோனா ஜீவநகர் பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காணி இல்லாத 380 குடும்பங்களைச் சேர்ந்த வறிய மக்கள் அந்த பகுதியிலுள்ள காணியின் பற்றைக்காட்டை வெட்டி துப்பரவு செய்து குடில் அமைத்து அதில் தங்கி பயிர் செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயற்படும் பொலிஸார் : மக்கள் விசனம் (Video) | Batticaloa Police Support Land Robber

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள காணி மாபியாவைச் சேர்ந்த ஒருவர், அதனை தனது காணி என ஆவணத்தை தயாரித்து சந்திவெளி பொலிஸாருடன் இணைந்து அந்த மக்களின் குடிசைகளுக்கு தீவைத்து, வேலிகளை பிடுங்கி அவர்களை வெளியேற்றியுள்ளாதாக குறித்த மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.


மேலும், சிலரை பொலிஸ் அதிகாரத்தினால் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்து அவர்களை அச்சுறுத்தியுள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மக்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சந்திவெளி பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இந்த காணி தனது எனவும் அங்கு குறியேறியவர்களை வெளியேற்றுமாறும் காணி மாபியாவை சேர்ந்த மேற்கூறிய நபர் பொலிஸாரிடம் கோரிய நிலையில், குடியேறியவர்களுக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்கள் அச்சம்

இந்நிலையில், குறித்த மக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத் முன்னிலையாகிய நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இந்த காணியை உரிமை கோருபவருக்கு சொந்தமானது அல்ல எனவும் வெளியேறியவர்களை மீள குடியேறுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்பளித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் பொலிஸார், குறித்த காணியில் மீண்டும் துப்பரவு பணிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தொடர்ச்சியாக காணி மாபியாவுடன் சேர்ந்து மீண்டும் குடிசைகளை பக்கோ வாகனத்தினால் உடைத்து தள்ளி அராஜகம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (04.12.2023) சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத் முன்நகர்வு விண்ணப்ப பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளார்.

மேலும், அந்த காணிப்பகுதிக்கு பொலிஸார் செல்ல கூடாது எனவும் அதில் வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் குடியேறுமாறும் நான்காவது தடவையாக தீர்ப்பளித்துள்ளார்.

இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பை மீறி மீண்டும் சந்திவெளி பொலிஸார் காணி மாபியாவுடன் இணைந்து அராஜகம் செய்வார்கள் என அச்சமடைந்துள்ளோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மோசடிகள் : சிக்கித் தவிக்கும் மக்கள்

இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மோசடிகள் : சிக்கித் தவிக்கும் மக்கள்

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US