வரலாற்று சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நாதஸ்வர கச்சேரி
நேற்று சனிக்கிழமை இரண்டாம் நாள் பூஜையாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.
நேற்று மாலை தம்ப பூஜை மூலவர்க்கான அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வந்ததுடன் வெளிவீதியுலாவும் நடைபெற்று சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் நாள் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் சிறப்பு மேள நாதஸ்வர கச்சேரியும் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
