சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சமூகத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக குற்றச்சாட்டு

Batticaloa Election Oddamavadi Srilanka freedom party
By Navoj Aug 01, 2021 02:43 PM GMT
Report

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தனக்குச் சொற்ப இலாபங்கள் கிடைக்கின்றது என்பதற்காக பொறுத்தமில்லாத ஒரு நபருக்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுப்பது கல்குடா சமூகத்திற்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்கின்ற மோசடியான விடயம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.ஹாருன் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சபை உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஓட்டமாவடியில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது. ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் இரண்டு பாரிய கட்சிகளுடன் போட்டியிட்டு எமது வேட்பாளர்களின் பாரிய முயற்சியின் பயனாக ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினை பெற்றோம்.

இது வரலாற்றில் ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த முதல் ஆசனமாகும். ஓட்டமாவடி பிரதேச சபையில் கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனமானது சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தீர்மானிக்கும் ஆசனமாகக் காணப்பட்டது.

இதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எங்களுக்குப் பிரதி தவிசாளர் பதவி வழங்கினால் ஆதரவு வழங்குவதாகக் கூறி நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கி உப தவிசாளர் பதவியினை பெற்றுக் கொண்டோம்.

குறித்த தேசிய பட்டியில் ஆசனத்தினை அதிகம் வாக்கு பெற்றவருக்கு இரண்டு வருடமும், இரண்டாவது இடத்தில் உள்ளவருக்கு மூன்றாவது வருடமும், மூன்றாவது உள்ளவருக்கு நான்காவது வருடமும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த வகையில் இரண்டாவது இடத்திலிருந்தவர் வேறு கட்சிக்குச் சென்றதால் அதிக வாக்குகளைப் பெற்றவரே பதவி வகித்து வந்த நிலையில் மூன்று வருடம் முடிந்த நிலையில் தனது பதவியினை பிரதி தவிசாளராக செயற்பட்ட அஹமட் லெப்பை இராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ள மாஞ்சோலை வட்டார வேட்பாளர் நுபைல் என்பவருக்கு எனது இராஜினாமா மூலம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பீடத்திற்குப் பிரதி தவிசாளராக செயற்பட்ட அஹமட் லெப்பை கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் இதில் திட்டமிட்ட வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுபைர் ஹாஜியார் இல்லாமல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். தேர்தலில் போட்டியிட்டவர்கள் யார் என்பது தெரியாது, பெற்ற வாக்குகள் தெரியாமல் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகத் தனது பகுதியில் மாத்திரம் செயற்பட்டு வருகின்றார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மீது உள்ள தனிப்பட்ட கோபத்தின் அடிப்படையில் அல்லது ஏதாவது கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் பொருத்தமில்லாத பட்டியலில் தற்காலிகமாக போடப்பட்ட நபருக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தினை வழங்கியிருப்பது என்பது உண்மையிலே கல்குடா சமூகத்திற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள், அமைப்பாளர் ஆகியோருக்கு செய்த சமூக துரோகமாக நான் பார்க்கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுபைர் ஹாஜியார் தனக்குச் சொற்ப இலாபங்கள் கிடைக்கின்றது என்பதற்காக பொருத்தமில்லாத ஒரு நபருக்குப் பதவியைத் தாரை வார்த்துக் கொடுப்பது கல்குடா சமூகத்திற்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்கின்ற மோசடியான விடயம் என்பதாகும்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் செலவு செய்து கஷ்டப்பட்டு வாக்குகளைச் சேகரித்த வேட்பாளர்களுக்குக் கிடைக்கப் பெற்ற ஆசனம் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று இருந்த போதிலும் தற்காலிகமாகப் போடப்பட்ட ஒருவருக்கு, அவரே தனது கட்சிக்கு வாக்களிக்காத நிலையில் அவருக்கு இந்த உறுப்பினர் பதவியை வழங்குவது உகந்ததல்ல.

எனவே தேர்தலில் போட்டியிட்ட, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நபருக்கு வழங்குவது சாலச்சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.  

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
நன்றி நவிலல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கிளிநொச்சி, கொழும்பு

26 Dec, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US