காட்டு வேளாண்மையின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள மட்டக்களப்பு விவசாயிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்டு செய்கை பண்ணப்பட்டள்ள வேளாண்மைச் செய்கையில் காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வயலில் வேளாண்மையைப் போன்றே வளரும் குறித்த காட்டு வேளாண்மையை அகற்றுவதற்கு விவசாயிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, பாரிய சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
தமது வயல் நிலங்களில் கட்டுக்கடங்காத வகையில் காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதகால் அதனை அகற்றுவதில் சில விவசாயிகள் நாட்டம் செலுத்தாத நிலையும் காணப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டு வேளாண்மை
இவ்வாறு காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரிப்பால் எதிர்பார்த்த விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தொடர்ந்தும் இவ்வாறு காட்டு வேளாண்மையின் தாகத்தினாலும் மேலும் பாதிக்கப்படுவதனால் தமது இவ்வருட வாழ்வாதாரத் தொழில் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே இவ்வாறான நிலையிலும் விவசாயிகளுக்குரிய மானியங்கள் வழங்கப்படுவதில் திருப்தியற்ற சூழல் காணப்படுவதாகவும், இவ்வாறான தாக்கங்களைக் கட்டுப்படுவத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும், பாதிப்புக்களுக்கு ஏற்ற மேலதிக இழப்பீடுகனையும் அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
