மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலய பாமாலை இசை வெளியீட்டு நிகழ்வு
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் முதலாவது பக்தி காவியப் பாமாலை இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஊடகவியலாளரும் வானொலிக் கலைஞருமான விஸ்வநாதன் பத்மஸ்ரீயால் இயற்றப்பட்டு பாடப்பட்டுள்ள இந்த பாடல்களின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
பாடல்கள்
கிழக்கு மாகாணத்தின் ஆலயங்களின் வரலாற்றில் பெண் ஒருவர் செயலாளராகவிருந்து நிகழ்வொன்றுக்கு தலைமை தாங்கி நடாத்திய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
ஆலயத்தின் செயலாளர் தயாளகௌரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலயத்தின் பூசகர், ஆலயத்தின் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
வரலாற்றுசிறப்புமிக்க இந்த ஆலயத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல்கள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி- குமார்