மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயிக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை (21) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இராணுவ முகாமில் வைத்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இவரைக் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதவான்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 3 ம் திகதி வரை 14 நாட்களுக்கு
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
