அநுர அரசின் சட்டங்களை எதிர்த்து மட்டக்களப்பில் போராட்டம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை முன் வைத்து மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று(28.02.2026) மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணியானது காந்திப் பூங்க வரை சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்
குறித்த போராட்ட பேரணியில்,
மதத்தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உபதலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி,செயலாளர் உறுப்பினர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமான கண்டன பேரணியானது திருமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் வரையில் ஊர்வலமாக சென்று, நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காந்திபூங்காவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் ஆகிய இரண்டுமே வேண்டாம், மக்களை ஒடுக்குகின்ற எந்தச் சட்டங்களும் வேண்டாம், பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் இந்த நாட்டுக்கு இருக்கின்ற குற்றவியல் சட்டங்களே போதுமானது. மேலும், வல்லரசுகளே மக்களை நசுக்கும் சட்டங்கள் பற்றி சிந்திக்காத போது நமது நாட்டுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் எதற்கு?
மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள் எதுவும் வேண்டாம், சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகப் பார்க்கும் சட்டம் எதற்கு? பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?, சட்டம் யாருக்கானது? மக்களைப் பாதுகாக்கவா? அரசைப் பாதுகாக்கவா?, அரசே, பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாமல் செய்வோம் என மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்று போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கோஷமிட்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam