பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By P.Sasikaran Dec 18, 2023 07:24 PM GMT
Report

எங்கள் மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்றைய தினம் (18.12.2023) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

35 ரூபாவிற்கு முட்டைகள்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

35 ரூபாவிற்கு முட்டைகள்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட எங்களது உணர்வாளர்களை பார்ப்பதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று இருந்தேன்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் நகுலேஷன் மற்றும் முனைக்காட்டை சேர்ந்த பேக்கரியில் கேக் விற்பனை செய்தவர் இவ்வாறாக11 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கின்றார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

உண்மையில் நகுலேஷ் இறந்த மாவீரர்களது குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்காக அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதே போன்று மோசேஸ் என்கின்ற பையன் பேக்கரியில் ஒரு கேக் விற்பனை செய்வதற்காக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

அதுபோல வாடகைக்கு வண்டி செலுத்துபவர் தரவை மாவீரர் உயிலும் இல்லத்திற்கு ஒலிபெருக்கி போன்ற பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் அதைவிட இன்னும் ஒரு மோசமான நிகழ்வு கறுவாக்கேனியிலே இடம்பெற்றிருக்கின்றது. 

வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல்

வடக்கு - கிழக்கு மழைவீழ்ச்சி தொடர்பில் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட தகவல்


இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுக்காக பணம் கேட்டதாக முறைப்பாடு ஒன்றை வேண்டுமென்று செய்திருக்கின்றார்.

அவருக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்து இருக்கின்றது. அந்த வகையில் இந்த முறை பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு உள்ளே கைது செய்தது ஒரு திட்டமிட்ட செயலாகத்தான் நான் பார்க்கின்றேன்.

ஏனென்றால் இந்த முறை 12 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்தடுத்து வரும் தினங்களில் இந்த மாவீரர் நினைவு நாட்களை செய்வதற்கு மக்களை பயம்முறுத்தும் ஒரு செயலாக பொலிஸார் இந்த வேலைகளை செய்து இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

ஏனென்றால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரது படத்தையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூர்வதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்திருப்பது என்பது உண்மையிலேயே ஏற்க முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நாட்டில் வடகிழக்கில் மாத்திரமல்ல முழு நாட்டிலுமே பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றது. தெற்கில் இரண்டு தடவை கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது.

அதேபோன்று வடகிழக்கில் தங்களது உரிமைகளை பெறுவதற்காக மக்கள் போராடியிருக்கின்றார்கள் மரணித்திருக்கின்றார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

அந்த வகையில் எங்களது மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்புப் படையோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம்.

இந்த வருடம் 10 பேரை கைது செய்திருக்கின்றீர்கள் அடுத்த வருடம் நீங்கள் விருப்பமென்றால் இதைவிட அதிகளவான கைதுகளை செய்யலாம். 

ஆனால் ஒன்று கைது செய்வதை மிகவும் அநியாயமான கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். எந்த வித வாழ்வாதாரமும் அற்ற வகையிலே அவர்களது குடும்பம் நிற்கதியாகியுள்ளது. 

அவர்களது உறவினர்கள் மரணித்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூர்ந்ததற்காக அவர்களை நிர்கதியாக்கி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை அடைத்து வைத்திருப்பது என்பது ஏற்க முடியாத விடயம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க இருப்பதாக இன்று(18) மதியம் செய்தி அனுப்பியிருக்கின்றார். 

நிச்சயமாக 21ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதியை சந்திப்போம். அவரிடம் நாங்கள் இந்த பிரச்சினையை மிகவும் ஆணித்தரமாக கூறுவோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம் | Batticalo Press Meet Govindan Karunakaram

அவரது கூற்று மற்றும் உத்தரவுகள் பாதுகாப்பு படையினாலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் நிறைவேற்றப்படுவதாக கடந்த காலங்களிலே எமக்கு தெரியவில்லை. 

இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த உறவுகள் சம்பந்தமாக 21ஆம் திகதி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவோம் என தெரிவித்துள்ளார்.

You may like this,


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு

யாழில் நடைபெறவிருந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

யாழில் நடைபெறவிருந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US