மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு

Batticaloa Sri Lanka Politician
By Dhayani Dec 18, 2023 04:34 PM GMT
Report

அரசியல் கட்சிகளின் தலையீட்டிற்கு இடமளிக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் முரளீதரனுக்கு மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. ஆனால் ஆளும் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருப்பார்களா? அவரின் நியமனக்கடிதம் வழங்கப்பட்ட போதே அங்கு ஒட்டிக்கொண்டிருந்த அரசியல்வாதி தனது சிபாரிசில் தான் இந்த நியமனம் நடைபெற்றதாக கூறி வருகின்றார்.

வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு | Batticalo New District Secretariat

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தலையீடு

அவரின் கட்சியின் முகநூலிலும் அப்படத்தை போட்டு செய்தியை வெளியிட்டு புதிய அரசாங்க அதிபருக்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள். அவரின் நிர்வாக கடமைகளில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தலையீடு செய்ய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

கடந்த காலங்களில் இருந்த அரசாங்க அதிபர்கள் சிலர் முழுக்க முழுக்க ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாகவே செயற்பட்டனர். 

குறிப்பாக சாள்ஸ் மட்டக்களப்பு மாவட்டத்தை சீரழித்தவர்களில் மிக முக்கியமானவர். அம்பிட்டியதேரரின் அடாவடித்தனங்களை ஊக்குவித்தவர். பிரதேச செயலாளரை தாக்கிவிட்டு நேரே மாவட்ட செயலகத்திற்கு வந்த அம்பிட்டிய தேரரை வரவேற்று உபசரித்து அவரின் அடாவடித்தனத்தை ஊக்கிவித்தவர் அவர் தான்.

இறுதியாக இருந்த அரசாங்க அதிபர் பத்மராசாவும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையாட்டி பொம்மையாகவே செயற்பட்டவர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு | Batticalo New District Secretariat 

அரசியல் தலையீடு

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் தலையீடுகளுக்கு இடம்கொடுக்காது மிகச்சிறப்பான நிர்வாகத்தை செய்த அரசாங்க அதிபர்களும், ஆளுமை மிக்க ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் இருந்திருக்கிறார்கள்.

அந்தோனிமுத்து, யோகநாதன், ஏ.கே.பத்மநாதன் என மிக நேர்மையானவர்கள் அரசாங்க அதிபர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக செயற்பட்டதும் கிடையாது. மிக நேர்மையாக தமது கடமைகளை செய்திருக்கிறார்கள். 

அந்தோனிமுத்து அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக தேவநாயகம் பதவி வகித்தார். இப்போது இருக்கும் அரைகுறை அமைச்சர்களை போல் அல்ல தேவநாயகம். அவர் ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியாக இருந்தவர்.

சட்டபுலமையும் நிர்வாக ஆளுமையும் மிக்கவர். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் பின்னர் நீதி அமைச்சராகவும் இருந்தவர். தேவநாயகம் அரசாங்க அதிபர்களின் கடமைகளில் தலையிடுவது கிடையாது. எனது சிபாரிசில் தான் அரசாங்க அதிபரை நியமித்தேன் என கூறித்திரிவதும் கிடையாது. அந்தோனிமுத்து, யோகநாதன், ஏ.கே.பத்மநாதன் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் சிபார்சில் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் அரசியல் தலையீடு: இரா.துரைரெட்னம் குற்றச்சாட்டு | Batticalo New District Secretariat 

மாவட்ட செயலக நிர்வாகம்

திறமையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். அரசியல்வாதிகளுக்கு கைக்கட்டி நின்றவர்களும் அல்ல. அமைச்சர் தேவநாயகம் போன்றவர்கள் மாவட்ட செயலக நிர்வாகத்தில் தலையிட்டதும் கிடையாது. ஆனால் இப்போது அரைகுறை அமைச்சுக்களை வைத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகங்களில் செய்யும் தலையீடுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.

அரசியல் தலையீடுகளுக்கு இடம்கொடுக்காது நிர்வாகம் செய்த அந்தோனிமுத்து யோகநாதன் ஏ.கே.பத்மநாதன் போன்ற ஆளுமைகளை போல புதிய அரசாங்க அதிபர் செயற்படுவாரா அல்லது அவரை சுதந்திரமாக செயற்பட இந்த அரைகுறை அமைச்சர்கள் விடுவார்களா? இந்த அரைகுறைகளின் ( ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ) தலையீடுகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

You may like this,


கடமைகளை பொறுப்பேற்ற மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்

கடமைகளை பொறுப்பேற்ற மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்

சவேந்திர சில்வா ஊடான இந்தியாவின் இரகசிய நகர்வு (Video)

சவேந்திர சில்வா ஊடான இந்தியாவின் இரகசிய நகர்வு (Video)


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US