பட்டலந்த சித்திரவதை தொடர்பான ஆணைக்குழு கண்டுபிடித்த சில உண்மைகள்

Ranil Wickremesinghe Batalanda commission Report
By Amal Mar 24, 2025 12:00 AM GMT
Report

1995 ஆம் ஆண்டு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே, செப்டம்பர் 21 ஆம் திகதியன்று, பட்டலந்த சித்திரவதைக்கூடச் சம்பவங்களை விசாரிக்க விசாரணை ஆணையகத்தை அமைக்க உத்தரவிட்டார்.

பியகமவில் உள்ள பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் இளைஞர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்து கொலை செய்வது மற்றும் காணாமல் போனமை குறித்து விசாரிக்கும் பணி இந்த ஆணையகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், 1988 மற்றும் 1990 க்கு இடையில் பட்டலந்த வீட்டுவசதித் வளாகத்தில் நடந்த கொடும் நிகழ்வுகள் தொடர்பான ஆணையகத்தின் சில முக்கிய கண்டுபிடிப்புக்கள் வெளியாகியுள்ளன.

மத்திய விரைவுச்சாலை கட்டுமானம் தொடர்பில் வெளியான தகவல்

மத்திய விரைவுச்சாலை கட்டுமானம் தொடர்பில் வெளியான தகவல்

பட்டலந்த வீட்டுவசதித் திட்டம்

1988 ஜனவரி 1, முதல் 1990 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் பட்டலந்த வீட்டுவசதித் வளாகத்தில் உள்ள பல வீடுகளில், பலர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக ஆணையகத்தின் அறிக்கை கூறியுள்ளது.

பட்டலந்த சித்திரவதை தொடர்பான ஆணைக்குழு கண்டுபிடித்த சில உண்மைகள் | Batalanta Commission Report

அந்த நேரத்தில் இந்த வளாகம் அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இருந்தது. அத்துடன் அது தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இருந்தது. இதன்போது, அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்தார்.

களனி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகளை ஒதுக்கி விடுவிக்குமாறு, அரச உர உற்பத்தி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக ஆணையகத்தின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதன்படி, வளாகத்தில் உள்ள யு 2ஃ2, யு 2ஃ1, யு 2ஃ3, யு 1ஃ7, டீ 2, டீ 1, மற்றும் டீ 7 உள்ளிட்ட முக்கிய வீடுகள் இந்த அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டன.

பேலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டக்ளஸ் பீரிஸ் தலைமையிலான பொலிஸ் பிரிவினரால் இந்த வீடுகளில் பல பயன்படுத்தப்பட்டதை ஆணையகம் கண்டறிந்துள்ளது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு

சட்டவிரோத ஆக்கிரமிப்பு

இதனை தவிர களனி நாசகார எதிர்ப்பு நடவடிக்கைப் பிரிவுக்கும் 13 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்த வீடுகளில் ஒன்று ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட அலுவலகமாகவும் செயற்பட்டது.

பட்டலந்த சித்திரவதை தொடர்பான ஆணைக்குழு கண்டுபிடித்த சில உண்மைகள் | Batalanta Commission Report

இந்தநிலையில், பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் சட்டவிரோதமாக வீடுகளை ஆக்கிரமிக்க வசதி செய்து கொடுத்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சர் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததாக ஆணையகம் கண்டறிந்துள்ளது இந்த வீட்டு வசதிகளில் பணியாற்றிய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டக்ளஸ் பீரிஸ், தலைமை பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித் விக்ரமசிங்க, மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நளின் தெல்கொட உள்ளிட்ட 15 பொலிஸ் அதிகாரிகளை ஆணையகம் அடையாளம் கண்டுள்ளது.

பட்டலந்த வீட்டுவசதி வளாகத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக துணை பொலிஸ் மா அதிபர் மெரில் குணரத்னவையும் ஆணையகம் விமர்சித்துள்ளது.

இந்த வீடுகள் சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நளின் தெல்கொட, வேண்டுமென்றே தலையிடவில்லை என் ஆணையகம் குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நபர்களுக்கு நேரடியாகப் பொறுப்பான 13 அதிகாரிகளை ஆணையகம் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டக்ளஸ் பீரிஸ்,

பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித் விக்ரமசிங்க,

பொலிஸ் சார்ஜென்ட் ரத்நாயக்க

பொலிஸ் சார்ஜென்ட் ரணதுங்க,

துணை பொலிஸ் ஆய்வாளர் தெல்கஹகொட ,

பொலிஸ் சார்ஜென்ட் உபாலி லக்கேவ,

பொலிஸ் கான்ஸ்டபிள் வாகன ஓட்டுநர் ரஞ்சித்,

பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயவர்தன,

பொலிஸ் கான்ஸ்டபிள் ஹீன்பண்டா,

பொலிஸ் சார்ஜென்ட் கப்பகொட,

பொலிஸ் கான்ஸ்டபிள் பத்மினி பிரேமலதா,

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ச்மன்,

பொலிஸ் கண்காணிப்பாளர் சுனில் பண்டார நிசங்க ஆகியோரே குறித்த 13 பேராகும்.

நிகழ்நிலை மோசடிக்கு ஆளாகும் மக்கள்: மத்திய வங்கி ஆளுநர் கவலை

நிகழ்நிலை மோசடிக்கு ஆளாகும் மக்கள்: மத்திய வங்கி ஆளுநர் கவலை

தடுப்பு மையங்கள்

இந்தக் காலகட்டத்தில் பட்டலந்த வீட்டுவசதி வளாகத்தில் நடைபெற்ற, பொலிஸ் ஒன்றுகூடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பன பாதுகாப்பு அமைச்சினால் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை ஆணையகத்தின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

எனினும், அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும் அவ்வாறு செய்ய அவருக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை.

ரணில் விக்ரமசிங்க, அரச உர உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் வளாகத்திற்குள் உள்ள வீடுகளில், டீ2, டீ8, டீ34, மற்றும் யு1ஃ8 உள்ளிட்ட சட்டவிரோத தடுப்பு மையங்களை அமைக்குமாறு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த சட்டவிரோத தடுப்பு மையங்களை அமைத்து நடத்தியவர்கள் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டக்ளஸ் பீரிஸ் மற்றும் தலைமை பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித் விக்ரமசிங்க ஆகியோர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது அங்கு பலர் சித்திரவதை செய்யப்பட்டு தவறாக நடத்தப்பட்டனர்.

அப்போதைய பொலிஸ் மா அதிபர் எர்னஸ்ட் பெரேரா, என்ன நடக்கிறது என்பதை சரியாக அறிந்திருந்தார், ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்யும் தேர்வு அவரிடம் இருக்கவில்லை என்று ஆணையகம் தெளிவாகக் கூறுகிறது.

மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US