பட்டலந்த வதை முகாமில் நடந்தது என்ன..! முழுமையான விபரங்களை பகிரங்கப்படுத்திய ரணில்

Ranil Wickremesinghe Batalanda commission Report
By Aanadhi Mar 16, 2025 08:00 PM GMT
Report

1999ஆம் ஆண்டு படலந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். அதில் என்னை ஒரு சாட்சியாகவே அழைத்திருந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள பட்டலந்த வதை முகாம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் அவர் வழங்கியுள்ள விளக்கக் காணொளியிலேயேரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பூதாகரமாகும் பட்டலந்த அறிக்கை! நாட்டு மக்களுக்கு இன்று ரணில் சொல்லப் போகும் செய்தி

பூதாகரமாகும் பட்டலந்த அறிக்கை! நாட்டு மக்களுக்கு இன்று ரணில் சொல்லப் போகும் செய்தி

ரணிலின் விளக்கம்..

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“ 87ம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஜே.வி.பி. நாடுமுழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள். அந்தக் கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பு ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதன் பிறகு வரவேண்டியது, பியகம பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மகாவலியில் இருந்து கொழும்புக்கு மின்விநியோகம் செய்யும் இடம், சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளிட்ட முக்கிய கேந்திர இடங்கள் இருந்தன.

அவற்றைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தினரும் பொலிசாரும் அழைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களுக்கு தங்குமிடங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் படலந்த ஒரு உர உற்பத்தி நிலையமாக செயற்பட இருந்தது. அங்கு அரச ஊழியர்கள் சிலரும் வசித்தார்கள்.

அக்காலகட்டத்தில் சப்புகஸ்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் ஜே.வி.பி.யினர் படுகொலை செய்திருந்தார்கள். இன்னும் பல பொலிஸ் அதிகாரிகளையும், மாகாண சபை உறுப்பினர்களையும் படுகொலைசெய்திருந்தார்கள்.

அந்தக் கட்டத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தின, என்னைத் தொடர்பு கொண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்கு படலந்தையில் காலியாக இருந்த வீடுகளை ஒதுக்கிக் கொடுக்க வழிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பிரகாரம் அந்த வீடுகளை அப்போதைய களனி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொட அவர்களின் பொறுப்பில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பட்டலந்த வதை முகாமில் நடந்தது என்ன..! முழுமையான விபரங்களை பகிரங்கப்படுத்திய ரணில் | Batalanda Commission Report Ranil S Statement    

எனினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவியில் இருந்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அதன் பின்னர் 1994ம் ஆண்டின் பின்னர் சந்திரிக்கா அரசாங்கம், பட்டலந்தையில் வதைமுகாம் ஒன்று இருந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்தது. அதன் முக்கிய நோக்கம், அரசியல் ரீதியாக சேறுபூசுவதாகும்அக்காலத்தில் நான் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தேன்.

1999ஆம் ஆண்டு படலந்தை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். அதில் என்னை ஒரு சாட்சியாகவே அழைத்திருந்தார்கள். மேலும் பலரும் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அதன்போது ஒரு அமைச்சர் என்ற வகையில் பட்டலந்தை வீட்டுத் தொகுதியில் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு நேரடியாக வீடுகளை வழங்கியது தவறு என்று குறிப்பிடப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் ஊடாக அதனை வழங்கியிருக்கலாம் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு. மற்றபடி எனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.

பட்டலந்த வதை முகாமில் நடந்தது என்ன..! முழுமையான விபரங்களை பகிரங்கப்படுத்திய ரணில் | Batalanda Commission Report Ranil S Statement

ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கையில் மூன்றாம் அத்தியாயம் முழுக்க ஜே.வி.பி.யின் படுகொலைகள் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் இதுவரை காலமும் யாரும் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஒழித்து வைத்திருக்கவில்லை. எந்தவொரு அரசாங்கமும் அதனைக் கொண்டு அரசியல் செய்ய முயற்சிக்கவும் இல்லை.

அதனைக் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று இதுவரை யாரும் கோரவில்லை. குறைந்த பட்சம் ஜே.வி.பி.யினர் கூட அப்படியான கோரிக்கையொன்றை முன்வைக்கவில்லை. அதன் காரணமாகவே குறித்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை.

அதே போன்று நாடாளுமன்ற அமர்வொன்றின் அறிக்கை குறித்து 25 வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்தும் சம்பிரதாயம் இதுவரை நம் நாட்டில் இருக்கவில்லை. அதுவும் ஒரு தவறான முன்னுதாரணமேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த அறிக்கை மீதான விவாதம் குறித்து வெளியான தகவல்

பட்டலந்த அறிக்கை மீதான விவாதம் குறித்து வெளியான தகவல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Dortmund, Germany

29 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Montreal, Canada, Toronto, Canada, Vancouver, Canada

30 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, வெள்ளவத்தை

04 Dec, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, வெள்ளவத்தை, மாதகல்

05 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், நோர்வே, Norway

05 Dec, 2015
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, துணுக்காய், சென்னை, India

05 Dec, 2025
மரண அறிவித்தல்

கைதடி தெற்கு, கொழும்பு

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், St. Gallen, Switzerland

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
7ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கிளிநொச்சி, நெதர்லாந்து, Netherlands, London End, United Kingdom

04 Dec, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Scarborough, Canada

01 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Harrow, United Kingdom, Buckinghamshire, United Kingdom

04 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US