இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம் தொடர்பான தமது எதிர் நிலைப்பாடு மற்றும் பரிந்துரைகளை எடுத்துரைத்து, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அத்தகைய நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, தகுதி மற்றும் சட்ட மற்றும் நெறிமுறை தரநிலைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2025, ஜனவரி 8ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதிலும் நீதித்துறையின் முக்கிய பங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அளவுகோல்கள்
நீதித்துறை அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு, நீதியரசர்களை நியமிக்கும் செயன்முறை மூப்பு, தகுதி மற்றும் தகுதியின் அடிப்படையில் அது அமைய வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தற்போது நான்கு வெற்றிடங்கள் உள்ளன. இந்தநிலையில், குறித்த நியமனங்களின்போது, நேர்மை, சுதந்திரம் மற்றும் திறனை பிரதிபலிக்கும் வகையில் அளவுகோல்களைப் பின்பற்றுமாறு, சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri