பசில் வந்து எரிபொருள் விலையை குறைப்பார் - பொதுஜன பெரமுன
பசில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கியவர் மட்டுமல்ல எனவும் நாட்டில் நடந்த மிகப் பெரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் பின்னணியில் இருந்து செயற்பட்ட பாத்திரம் எனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் பசில் ராஜபக்ச இருந்திருப்பார் என்றால், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இரண்டு முறை சிந்திக்க சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பார் என மக்கள் மத்தியில் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ரஞ்சித் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச நாட்டுக்கு திரும்பி வரும் வரை மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர். எரிபொருள் விலையை குறைப்பது அந்த எதிர்பார்ப்புகளில் ஒன்று.
இந்த நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரித்தது பொருத்தமானது என நம்பவில்லை. எமது கட்சியின் நிலைப்பாட்டை பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
என்ற வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறித்து எமது அதிருப்தியை வெளியிடுகிறோம் எனவும் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.