ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இன்றைய தினமும் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அரசியல் கள நிலவரங்கள்
அண்மையில் நடைபெற்ற மே தின நிகழ்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் கள நிலவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதிகாரப் பகிர்வு மற்றும் தனியார்மயப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்தினதும் மொட்டு கட்சியினதும் கொள்கைகள் மாறுபட்டவை என பசில் ராஜபக்ச கடந்த சந்திப்புக்களின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த மகாநாயக்க தேரர் மற்றும் தேசிய அமைப்புக்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan