அடுத்த வாரம் நாடு திரும்பும் பசில்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பேருவளை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பும் பசில்
பசில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் பசில் ராஜபக்ச, அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல்கள் தொடர்பிலும் பெசில் ராஜபக்ச தீர்மானங்களை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |