நாடாளுமன்றத்திற்கு வந்தார் பசில் (Photo)
முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் காணப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. எனினும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை.
பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு செய்திகளுக்கு மத்தியிலும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

