நாற்காலியில் இருந்து விழுந்து காயமடைந்த பசில்!

Matara Basil Rajapaksa Sri Lankan political crisis Law and Order
By Dharu May 23, 2025 04:10 PM GMT
Report

அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனை தொடர்பில் இடம்பெற்ற வழக்கின் போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பசில் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாத்தறை நீதவான் அருண புத்ததாசவினால் இன்று (23) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியில் 50 மில்லியனைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த வழக்கு இடம்பெற்றிருந்தது.

யுத்தம் தின்ற மண்ணை இந்தியாவிற்கு விற்கும் அநுர அரசு

யுத்தம் தின்ற மண்ணை இந்தியாவிற்கு விற்கும் அநுர அரசு

பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள்

குறித்த நிலத்தை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாற்காலியில் இருந்து விழுந்து காயமடைந்த பசில்! | Basil Rajapaksa Slipped And Fell From The Sun

குறித்த வழக்கில் முன்னதாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான போதிலும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் வழக்கின் மனுதாரர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பின்வரும் உண்மைகளை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தார்,

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

"இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பசில் ராஜபக்சவுக்கு செப்டம்பர் 18, 2024 அன்று மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

நாற்காலியில் இருந்து விழுந்து காயமடைந்த பசில்! | Basil Rajapaksa Slipped And Fell From The Sun

எனவே, அவரது பிணையை இரத்து செய்து, நியாயமான காரணத்தை தெரிவிக்காமல் நீதிமன்றத்தைத் தவிர்ப்பதற்காக பிடியாணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைக்கையில், 

பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி

“எனது கட்சிக்காரர் மே 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நாடு திரும்புவதற்காக விமான பயணசீட்டுக்களை முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அவர் அமெரிக்காவில் ஒரு நாற்காலியில் இருந்து விழுந்து கழுத்து மற்றும் நரம்பு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் அவர் 6 மாதங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளனர்." என கூறியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,

புதியவர்களுக்கு பதவி! அநுர அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்..

புதியவர்களுக்கு பதவி! அநுர அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்..

பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

மருத்துவ அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

நாற்காலியில் இருந்து விழுந்து காயமடைந்த பசில்! | Basil Rajapaksa Slipped And Fell From The Sun

"இந்த எக்ஸ்ரே அறிக்கைகளைப் பார்த்த பிறகு, இது கழுத்து சுளுக்கு மற்றும் தவறான தோரணை காரணமாக ஏற்பட்ட லேசான தசைப்பிடிப்பு மட்டுமே.

இது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் குணமாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ அறிக்கைகள் மார்ச் 18, 2025 அன்று வெளியிடப்பட்டன.

பிரதிவாதி சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி சொல்வது போல் 06 மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்க மருத்துவ பரிந்துரை இருந்தால், மே 18 மற்றும் 19 ஆம் திகதிகளுக்கான விமான டிக்கெட்டுகள் ஏன் முன்பதிவு செய்யப்பட்டன.

எனவே,  இந்த மருத்துவ அறிக்கைகளை நீங்கள் ஏற்க வேண்டாம். சந்தேக நபரின் பிணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த பிரதிவாதி சார்பானசட்டத்தரணி, 

பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி

“ எனது கட்சிக்காரர் நோய்வாய்ப்படாமல் வராததால் அவர் ஒரு திருடன் என்று காட்ட முயற்சிக்கிறீர்களா?

நாற்காலியில் இருந்து விழுந்து காயமடைந்த பசில்! | Basil Rajapaksa Slipped And Fell From The Sun

ஆனால் இவை அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவ அறிக்கைகள். எங்கள் மருத்துவர்களைப் போல திருடர்கள் இல்லை. எனது கட்சிக்காரர் அடுத்த நீதிமன்றத் திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்." என கூறியுள்ளார்.

வடக்கு-கிழக்கு மக்களின் காணி பிரச்சினை குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு-கிழக்கு மக்களின் காணி பிரச்சினை குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

நீதவான் உத்தரவு 

இதன்படி இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மாத்தறை நீதவான் அருணா புத்ததாச, தனது உத்தரவை அறிவித்தார்.

"இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன்படி, சந்தேக நபரான பசில் ராஜபகச அடுத்த நீதிமன்றத் திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்படுகிறார். இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது” என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US