103 கோடி ரூபா மோசடி! பசில் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 103 கோடி ரூபாவை மோசடியாக பயன்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இலஞ்சம் ஊழல்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜாமினி கமன் துசார வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், 2025 .07.07ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 103 கோடி ரூபாவை மோசடி செய்ததாக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்.
ஊழல் மோசடிகள்
இது தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று (2025.11.04) வாக்கு மூலம் அளித்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் குழுவினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

2010 தொடக்கம் 2014 வரை உள்ளூர் போக்குவரத்துக்காக இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதற்காக மகநெகும நிதியில் 150 இலட்சம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள 14 வாகனங்களை பாவித்து 600 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு பிரபுக்கள் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்கள் 64 பேரும் இராணுவத்தில் 84 பேரும் பயன்படுத்தியதற்காக 200 இலட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சீக்கிரம் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam