நாமலுக்குக் கிடைத்த பதவியால் பசில் - சமல் கடும் அதிருப்தி
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமையால் பசில் ராஜபக்சவும் சமல் ராஜபக்சவும் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாமல் ராஜபக்ச தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட மொட்டுக் கட்சியின் கூட்டத்தில் பசில் ராஜபக்சவும் சமல் ராஜபக்சவும் கடும் சோகமாகக் காணப்பட்டார்கள்.
அதற்குக் காரணம் நாமல் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டமைதான். ராஜபக்ச சகோதரர்கள் யாரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படக்கூடாது என்று சமல் எவ்வளவு எடுத்துக் கூறியும் நாமலை நியமித்துவிட்டார்களே என்ற கவலைதான் அவருக்கு.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கூடிப் பேசினர்.
"நாமலின் இந்த நியமனம் காரணமாக மொட்டுக் கட்சிக்குள் பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது.
நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வருவதால் இரண்டு அணிகளும் எமக்குத் தேவை. நாம் இரண்டு தரப்பையும் அணைத்துக்கொண்டு நடுநிலையாகச் செல்ல வேண்டும்." - என்று ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
