மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மதுவரி உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இதற்கிடையில், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி உத்தரவு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மரணம் பற்றி தலைவர் பிரபாகரன் கூறிய அந்த விடயம்! மெய்ப்பாதுகாவலர் கூறும் அதிர்ச்சித் தகவல் (video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam