வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos)

Mullaitivu Ranil Wickremesinghe SL Protest Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Badurdeen Siyana Oct 03, 2023 10:07 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

மன்னார்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம்பெறும் அத்துமீறல்களை நிறுத்தக் கோரியும் மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் (03.10.2023) செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

அதே நேரம் முல்லைத்தீவில் இடம் பெற்று வரும் போராட்டத்திலும் கலந்து கொண்டு நீதிபதி சரவணராஜவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன்னிலையாகவில்லை என்பதுடன் வழக்குகளுக்காக சமூகளித்த பொதுமக்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் (03.10.2023) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் யாழ்ப்பாண நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்த தொடர்பில் பாரபட்சமற்ற உரிய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும்.

எச்சந்தர்ப்பத்துலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டத்தரணிகள் வலியுறுத்தினர்.

சாவகச்சேரி 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப் புறக்கணிப்பு காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் வழக்குகள் தவணையிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக செய்திகள்: பிரதீபன்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் இன்று கண்டன ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதில் நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

இதேவேளை மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை. மாவட்ட நீதிமன்றம் ஏறாவூர் சுற்றுவா நீதிமன்றமு;.களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம், தொழிலாளர் நியாயசபை நீதிமன்றம் உட்பட 8 நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பால் அனைத்து நீதிமன்றங்கள்; இன்று செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-குமார்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03.0.2023) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு 

அதற்கமைய நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03.10.2023) இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

மேலதிக செய்திகள்: பாலநாதன் சதீஸ்

திருகோணமலை

முல்லைத் தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (03.0.2023) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதனை திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

நாட்டில் நீதி சுதந்திரம் 

நீதி தூறையை சுயமாக இயங்கவிடு, சட்ட ஆட்சியை நிலை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் சட்டத்தரணிகள்  ஈடுபட்டனர்.

நாட்டில் நீதி சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் நீதிபதி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதால் நீதியை நிலை நாட்ட முடியாமல் போகும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதில் பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்திருந்தனர்.

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு! பெருகும் ஆதரவு (Photos) | Bar Council Of North East Protest Sri Lanka

மேலதிக செய்திகள்: கஸ்பர்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், La Courneuve, France

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US