நாளைய தினம் வங்கிகள் திறந்திருக்கும்
நாளைய தினம் பொது விடுமுறை என்றாலும் வங்கிகள் அனைத்தும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளை 12ம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், புத்தாண்டு காலத்தில் மக்களின் கொடுக்கல் வாங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் வங்கிகள் அனைத்தையும் திறந்து வைத்திருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் நாளை திறந்திருக்கும் என அரச சேவைகள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்னசிறி தெரிவித்துள்ளார். நாளை விடுமுறை வழங்கப்பட்டாலும் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.