காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை..!

Missing Persons Sri Lankan Peoples Sri Lanka Banks
By Parthiban Jan 19, 2025 10:11 PM GMT
Report

பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வங்கி பரிவர்த்தனைகளின் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கிய கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்ள வங்கிகள் மறுப்பதை தடுக்க உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளருக்கு அறிக்கையை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ். நகைக்கடை கொள்ளை விவகாரம்: இராணுவ புலனாய்வை சேர்ந்தோர் கைது

யாழ். நகைக்கடை கொள்ளை விவகாரம்: இராணுவ புலனாய்வை சேர்ந்தோர் கைது

மனித உரிமைகள் ஆணைக்குழு

எனினும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தினமான ஜனவரி 14ஆம் திகதி, மத்திய வங்கியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை..! | Banks Of Sri Lanka Did Not Care Missing Persons

காலக்கெடு முடிந்து ஒரு நாள் கழித்து இலங்கை மத்திய வங்கி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

“முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பயணம் தொடர்பாக” 2025 ஜனவரி 2ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருட இறுதியில் முல்லைத்தீவில் மேற்கொண்ட கண்காணிப்பில் அடையாளம் கண்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த டிசம்பரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் வழங்கப்பட்ட காணாமற் போனோருக்கான சான்றிதழை வங்கிகள் புறக்கணிக்கின்றமை விசேட அம்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் வங்கிச் சேவையில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.”

வங்கி நடவடிக்கைககள் 

ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இதற்கான காரணங்களைக் கண்டறியும் முதல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, ஜனவரி 21ஆம் திகதிக்குள் பதில் அளிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை..! | Banks Of Sri Lanka Did Not Care Missing Persons

அன்றைய தினம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் இலங்கையிலுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கித் தலைவர்களுக்கும் மின்னஞ்சலை அனுப்பி, கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை சரியான ஆவணமாக ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணம் மற்றும் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழுக்குப் பதிலாக வங்கிகள் கோரும் வேறு ஆவணங்கள் என்னவென்பது குறித்த தகவல்களை ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பிரதிநிதி ஒருவரைத் தொடர்புகொண்டு காரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க நாம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

மலையகத்தில் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையகத்தில் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 19 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US