வங்கிகள் தொடர்பான பரேட் சட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்
வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கை சட்டமான பரேட் சட்டம் (Parate Law) நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை பரேட் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்
வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கை சட்டத்தின் (Parate Law) அதிகாரங்களை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும், குறிப்பிட்ட காலத்துக்கு பரேட் சட்டத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri