லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பான செய்தியை மறுக்கும் பந்துல குணவர்தன
லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை என ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஊடகங்களில் லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டல் ஒன்றாக மாற்ற ஜனாதிபதி ரணில் யோசனை முன்வைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
மறுக்கப்பட்ட செய்தி
லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ அல்லது விற்பனை செய்யவோ அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
தேசிய பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டு வரும் லேக் ஹவுஸ் நிறுவனத்தினை விற்பனை செய்வது குறித்து ஜனாதிபதியோ பிரதமரோ எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடாத்தவில்ல்லை.”என கூறியுள்ளார்.