அரச சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! பந்துல
அரச சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டொலர் பிரச்சினை
டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் இலங்கையினால் சர்வதேச சந்தையில் கொள்வனவு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஏதேனும் சொத்துக்களை விற்பனை செய்தாவது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்யத் தவறினால் சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் கையிருப்பு
டொலர் கையிருப்பினை 3 பில்லியன்களுக்கு மேல் பேண வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதாவது சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட இடைவெளி பிரச்சினைக்கு தீர்வு காண்பது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை விற்பனை செய்யும் போது மிகவும் அவதானத்துடன் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam