பண்டாரவளை மாநகரசபை மேயரின் முன்மாதிரியான செயல்
பண்டாரவளை மாநகரசபை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க பதவிக்காலம் நிறைவடைய முன்னரே உத்தியோகபூர்வ வாகனங்களைக் கையளித்துள்ளார்.
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை (19.03.2023) நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் விடுமுறை தினம் என்பதால் பண்டாரவளை மாநகர மேயர் நிஷாந்த ரத்நாயக் நேற்றைய தினமே தனது பதவிக்கான வசதிகளை கையளித்துள்ளார்.

ஆசியாவின் மிக இளம் வயது மேயர்
ஆசியாவின் மிக இளம் வயது மேயராக தெரிவாகியிருந்த நிஷாந்த ரத்நாயக்க தனது பதவிக்காலத்தில் பண்டாரவளை நகரின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நகரசபையின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது உத்தியோகபூர்வ வாகனம் உள்ளிட்ட வசதிகளை நகர ஆணையாளரிடம் கையளித்துவிட்டு மேயர் பதவிக்கான சலுகைகளை கைவிட்டுள்ளார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam