வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் தமிழர் ஒருவர் மரணம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மெல்பேர்னிலிருந்து நேற்று (27.05.2023) இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை
மெல்போர்னில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் விமானத்தில் உயிரிழந்ததையடுத்து விமானத்தை மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதற்கு பதிலாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
you may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
