6 வருடங்களிற்கு முன் இறந்தவரின் பெயரில் தியாகி திலீபனின் அஞ்சலிக்கு தடைக்கட்டளை
தியாகி திலீபனின் நினைவேந்தலை செய்யக்கூடாதென 6 வருடங்களின் முன்னர் காலமான ஒருவரின் பெயரில் பொலிஸார் நீதிமன்ற தடைக்கட்டளை விநியோகித்த சம்பவம் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாணசபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவராக செயற்பட்டவர் அன்ரனி ஜெயநாதன். சுமார் 6 வருடங்களின் முன்னர் அவர் காலமாகி விட்டார்.
இந்த நிலையில், இன்று அவரது வீட்டுக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், அன்ரனி ஜெகநாதன் என்பவரின் பெயரில் பெறப்பட்ட நீதிமன்ற தடைக்கட்டளையை அவரது மகனான இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் பீற்றர் இளஞ்செழியனிடம் ஒப்படைத்துள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவஞ்சலியை அனுட்டிக்கக்கூடாதென அதில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.