வழுக்கையாக வடிவமைக்கப்பட்ட பிரித்தானிய மகாராணியின் சிலை! காரணம் வெளியானது (PHOTO)
ஜேர்மனியில் உள்ள மெழுகு அருங்காட்சியகமொன்றில் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை அவரது தொப்பியின் கீழ் வழுக்கையாக வைத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை வழுக்கையாக வடிவமைத்தமை தொடர்பில் அருங்காட்சியகத்தின் நிர்வாகப் பங்குதாரரான Susanne Faerber கருத்து தெரிவிக்கையில்,
பணத்தைச் சேமிப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார். பார்வையாளர்களுக்குத் தெரியும் அளவிலான தலைமுடியினை மட்டுமே நாங்கள் பொறுத்தியுள்ளோம்.
இது ஒரு மெழுகு சிற்பம் தான், உண்மையான நபர் அல்ல, இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "ஜேர்மனியில் அவரது மாட்சிமையின் நிலை, கிரேட் பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தை கையாள்வதை விட வித்தியாசமானது, அங்கு பத்திரிகைகள் அவர்களுடன் அதிக உணர்வுடன் கையாள வேண்டும்" ர்னும் அவர் கூறியுள்ளார்.
95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் உலகின் தற்போதைய மூத்த மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்யும் மகாராணி ஆவார்.
இந்த அருங்காட்சியகத்தில் டொனால்ட் டிரம்ப், போப் பெனடிக்ட் XVI, காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மற்றும் ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் போன்ற பிரபலங்களின் சிலைகள் உள்ளன.