சஷீந்திர ராஜபக்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச பிணையில் செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஷீந்திர ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சஷீந்திர மீது, அரசு சொத்து சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் “ஊழல்” குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுப்படி, மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருந்த அவரது அரசியல் அலுவலகம் “அரகலய” போராட்டத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டபோது, அதற்கான நஷ்டஈடாக 88 லட்சத்து 50 ஆயிரம் ரூபா சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan