நடிகை தமிதா வழக்கு விவகாரம் : நீதிமன்ற உத்தரவு
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன (Tamita Aberathne) மற்றும் அவரது கணவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்றைய தினம் (24.04.2024) கோட்டை (Kotte) நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கடந்த 5ஆம் திகதி நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 5 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா...! மீண்டும் கூடவிருக்கும் நிர்ணய சபை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 12 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri