துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்
பதுளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னேஹேன, பொத்துபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்போது 28 வயதான சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri