நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை - ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக 25 மாவட்டங்களைச் சேர்ந்த 219 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
2249 குடும்பங்களைச் சேர்ந்த 8164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மொத்தமாக 7 வீடுகள் முழுமையாகவும் 2053 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
மண்சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்றவர்களும் மீனவர்கள் மற்றும் கடல்போக்குவரத்து துறைசார்ந்தவர்களும் வளிமண்டவியல் திணைக்களம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசன திணைக்களம்
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள ஆறு பிரதான நீர்த்தேக்கங்களிலும் நடுத்தர அளவிலான மூன்று நீர்த்தேக்கங்களிலும் நீர் வான் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 82 சதவீதத்தை தாண்டி நிரம்பியுள்ளதாக முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.ஜி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்தார்.

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri
